2 April 2012

சட்டென்று விட முடியவில்லை ......

சட்டென்று...!
விட முடியவில்லை....
உன்னிடம் வாழ்ந்த ,
இனிய நாட்களை...!


நீ போன பின்பு  ,
மனசெல்லாம் நீ இருந்தும்,
உன் நிழல் தேடி
நான் அலைந்தேன் ...!

கண்ணிலும் அழவில்லை,
மனசுக்குள்ளும் அழவில்லை...
இருந்தும் என் மனம்
தவிக்குதடி .......

 தனிமையில் தவித்தேன்,
 பேசாமல் பேசினேன்,
 யாரும் உன்னை,
 தவறாக பேசாமல் இருக்க !


அம்மாவைத்   தவிர ,
வேறொரு  சாமியும்,
நான் கண்டதில்லையடி ....
உன்னிடம்  கண்டேனடி.....

உறக்கம் இல்லாமல் ,
என் இரவுகள்
போன போதும் ,
கனவுலகில்  திரிந்தேனடி ....

இதுவரை ..

என் வாழ்வில் ,
துணையாக இருந்தாய் ....!!!!
  " இனி என் ,
  வாழ்க்கைத்   துணைவியாக
   வருவாயா......?"