5 October 2016

இறுதியில் இருவரும்
பரிமாறிக்கொண்டது
ஒன்றே ஒன்றுதான் ...

"பிரிவு" எனும் "பரிசு"

கொடுத்த பரிசு
ஒன்று தான் .....

ஒரே ஒரு வித்யாசம் ...

அவளுக்கு சுதந்திரமானது...

எனக்கோ...

நரகமானது ....



20 October 2012

மறைப்பதும் மறப்பதும் ...

உன்னை சொந்தம்
கொள்ள நினைத்தேன் ...
கற்பனை மட்டும் ,
என் சொந்தமானது ...
காதலை சொல்லாமல்
போனது என் தவறே....
 நீ உணராமல் இருந்தால்
அது உன் தவறே...
மறப்பதும் , மறைப்பதும்
பெண்களின் சாபம்....!!!
நீ இல்லாமல் நான் இல்லை  ...
நான் இல்லாமல் நீ இல்லை ...
என்று வசனம் சொல்ல
விரும்பவில்லை......
மறைக்காமல் நான்  இருக்கிறேன்...
மறக்காமல்  நீ  இருந்தால்
போதும் எனக்கு....!!!

11 October 2012

அர்த்தமில்லாத அன்பில்.

அழ நினைத்தால் ,
கண்ணீரும் வர மறுக்கிறது ...!!!
என் மனதை வருத்த ,
அதற்கும் மனம் வர வில்லை ......!!!

என்னைச் சார்ந்தோரை விட ,
என் மேல் உள்ள
அர்த்தமில்லாத அன்பில்..!!!

12 June 2012

பிரிவு

அன்று .....
சின்ன சின்ன ,
பிரிவினை ஏற்க முடிந்தது...
அவள் எப்படியும்
 என்னை  சேர்வாள் என்ற
நம்பிக்கையில்....

இன்று ....
இப்பவும் அதே
நம்பிக்கையில் தான்..
அவளை பிரிந்தேன்....
என்  நம்பிக்கை....
 மூடநம்பிக்கை ஆனது...


2 April 2012

சட்டென்று விட முடியவில்லை ......

சட்டென்று...!
விட முடியவில்லை....
உன்னிடம் வாழ்ந்த ,
இனிய நாட்களை...!


நீ போன பின்பு  ,
மனசெல்லாம் நீ இருந்தும்,
உன் நிழல் தேடி
நான் அலைந்தேன் ...!

கண்ணிலும் அழவில்லை,
மனசுக்குள்ளும் அழவில்லை...
இருந்தும் என் மனம்
தவிக்குதடி .......

 தனிமையில் தவித்தேன்,
 பேசாமல் பேசினேன்,
 யாரும் உன்னை,
 தவறாக பேசாமல் இருக்க !


அம்மாவைத்   தவிர ,
வேறொரு  சாமியும்,
நான் கண்டதில்லையடி ....
உன்னிடம்  கண்டேனடி.....

உறக்கம் இல்லாமல் ,
என் இரவுகள்
போன போதும் ,
கனவுலகில்  திரிந்தேனடி ....

இதுவரை ..

என் வாழ்வில் ,
துணையாக இருந்தாய் ....!!!!
  " இனி என் ,
  வாழ்க்கைத்   துணைவியாக
   வருவாயா......?"

18 March 2012

எனது ஏக்கம்..!



ஏங்கினேன்!
எனை ஈன்ற தாய்
ஈரைந்து திங்களே,
 சுமந்ததால்  .....!

குறை தீர்த்தாள்!!!
 என் கல்லூரித் தாய்!!!

சுமந்தாள்...
எனை நான்கு வருடம்...!
மறவேன் .....
இனி என்றும் இவர்களை !

சுமப்பேன்....
 என் நெஞ்சில்..!
என்  சுவாசம்,
 உள்ள வரை....!!!

"மறுபிறவி உண்டோ?"
 நான் அறியேன்!!!

இருந்தால்...
 பிறப்பேன்...!!!

என்னிரு தாய்க்கும்
 மகனாய் 
மீண்டும்  ....!!!

22 February 2012

மறக்க முடியா தருணம்..
தவிர்க்க முடியா முடிவு ...
இன்று வரை கூடி  இருந்த மனம் ..

ஒரு சில வினாடிகள்,
தவித்து ஏங்கியது  ...

சிரிப்புகள் மலர்ந்தாலும்   ,
இதயத்தில் தவிப்புகள் தொடர்ந்தது ..!

பேசாமல் பேசும் கண்கள்
கவலையை மறந்து திரியும் கால்கள் ...

வகுப்பறையை மட்டும் பிரிந்தோம் ....
எங்கள் மனச்சிறையில்
என்றும் இணைந்திருப்போம் ....