28 January 2012

கனா காணும் காலங்கள் ..!

கனவுகள் கலைந்து,
கிடைத்ததை பெற்று,
தயக்கங்கள் நிறைந்து,
எங்கிருந்தோ
வந்தேன்...!

உடுமலைவாசி ...
மதராசி
ஆனேன்..!

பார்க்கும்
இடமெல்லாம் 
புதுமைதான் ....!

பார்க்காத
முகங்களை
 கண்டேன்..!

கற்றிடாத
 பாடமெல்லாம்
கற்றேன்..!


தொலைந்து
போன நான்கு
வருடம்..!

கண்ணிலேயே
நிற்கும் ஒவ்வொரு
தருணம்..!



ஒவ்வொரு
நிகழ்வுகளும்
கண் முன்னே  
துளிகளாய்  நின்றது..!

கண்ணீரில்
நான் கண்டது..!
கடந்த
நான்கு
வருடம் தான்..!

என்னை மீறின
கோபம்  ....
அதனால் ஏற்பட்ட
மனஸ்தாபம் ....
மன்னிப்பு கேட்க
நினைக்கும் மனம் ..!!

கணக்கிட
முடியவில்லை..!
நான் பட்ட
கஷ்டத்தையும்,
நஷ்டத்தையும்,
இஷ்டத்தையும் ..


நட்பில் பிறந்து ,
இதயத்தில் வளர்ந்து
நிற்கும் காதல் ..!
சொல்ல
நினைக்கும் உயிர் ...
ஆனால் , ஏற்க
மறுக்கும் மனம் ....

ஆஹா ..!
எத்தனை ,எத்தனை ,
வலிகள்...!


 மீண்டும்
திரும்பிடாதா  ...?
இந்த இனிய
 காலங்கள்...!!!

நினைவுகள் மட்டும்
கையில் இருக்க ,
விடைபெறும் நேரம்,
நெருங்கி வருகிறது ..!

மாற்றங்களால்
 மாற்றப்படும் ,
ஒரு சின்ன
பயணம் தானே...
இந்த கல்லூரியும் ..!

என்றும்
நினைவுகளை
மனதில் சுமந்த படி ..!

பயணிக்கிறேன் ...
உங்களுடன் சேர்ந்து..!
நானும்.......!













20 January 2012

காதல் காற்றே !!!

காதல் காற்றே !
காதல் காற்றே !
நான் சுவாசிக்க வேணாமா?

நின்னு போன ,
எந்தன் உலகம் ,
மீண்டும் இயங்க வேணாமா?

உன்னை எண்ணி,
ஏங்கும அவஸ்தை ,
என்னுள் தீர வேணாமா?

தீராத சோகம் ,
உந்தன் வருகையால் ,
மாய்ந்து போக  வேணாமா?

காதல் தீயில் ,
விழுந்த என்னை,
உன்னால் அணைக்க வேணாமா?

உந்தன் காதில் ,
எந்தன் உதடுகள்,
காதல் சொல்ல வேணாமா?

பொய்யான உலகம் ,
மெய்யான காதலை,
நம்மால் உணர்ந்திட வேணாமா?

அட!போதும்,
உந்தன் மௌனம் ,
என்னால் தாங்கிட முடியாது..!

புயலாய் அடித்தாலும்,
தென்றலாய் அணைத்தாலும்,
கவலை ஏதும் இல்லையே !!

அன்பே !!
வா... என்னில் ...! 
மறு ஜென்மமும் வேணாமே!!!

4 January 2012

அவளும்.. நானும் ..

கைகூடி சாலையில் ,
நடந்ததில்லை...
முனு,,, முனுன்னு ..
தொலைபேசியில் ,
பேசியதில்லை...
நிறமும் நிழலும் ,
ஒன்று இல்லை...
கண் இமைக்காமல்,
ஒருவரை ஒருவர் ,
பார்த்ததில்லை..
தோளோடு தோள் ,
சாய்ந்ததில்லை ..
கொண்டாடும் விழாவும் ,
ஒன்று சேர்ந்ததில்லை...
காதல் காமம்  ,
ரெண்டுமே இல்லை...
எனக்கு அவள்
ஒரு இம்மி கூட
பொருத்தமில்லை...
இருந்தும் ....
கனவும்     தவிப்பும் ...
கண்ணிலே குறைந்ததில்லை ...




3 January 2012

காதல் என்றால் ...

அவள் என்னை வெறுத்து,
மனமில்லா ஒருவனுக்கு
மனைவியாகி....
மகப்பேறு பெற்றாலும்....
நான் ...
அவளின் கண்ணீருக்கு...
கண்ணீர் விடுவேன்...