28 January 2012

கனா காணும் காலங்கள் ..!

கனவுகள் கலைந்து,
கிடைத்ததை பெற்று,
தயக்கங்கள் நிறைந்து,
எங்கிருந்தோ
வந்தேன்...!

உடுமலைவாசி ...
மதராசி
ஆனேன்..!

பார்க்கும்
இடமெல்லாம் 
புதுமைதான் ....!

பார்க்காத
முகங்களை
 கண்டேன்..!

கற்றிடாத
 பாடமெல்லாம்
கற்றேன்..!


தொலைந்து
போன நான்கு
வருடம்..!

கண்ணிலேயே
நிற்கும் ஒவ்வொரு
தருணம்..!



ஒவ்வொரு
நிகழ்வுகளும்
கண் முன்னே  
துளிகளாய்  நின்றது..!

கண்ணீரில்
நான் கண்டது..!
கடந்த
நான்கு
வருடம் தான்..!

என்னை மீறின
கோபம்  ....
அதனால் ஏற்பட்ட
மனஸ்தாபம் ....
மன்னிப்பு கேட்க
நினைக்கும் மனம் ..!!

கணக்கிட
முடியவில்லை..!
நான் பட்ட
கஷ்டத்தையும்,
நஷ்டத்தையும்,
இஷ்டத்தையும் ..


நட்பில் பிறந்து ,
இதயத்தில் வளர்ந்து
நிற்கும் காதல் ..!
சொல்ல
நினைக்கும் உயிர் ...
ஆனால் , ஏற்க
மறுக்கும் மனம் ....

ஆஹா ..!
எத்தனை ,எத்தனை ,
வலிகள்...!


 மீண்டும்
திரும்பிடாதா  ...?
இந்த இனிய
 காலங்கள்...!!!

நினைவுகள் மட்டும்
கையில் இருக்க ,
விடைபெறும் நேரம்,
நெருங்கி வருகிறது ..!

மாற்றங்களால்
 மாற்றப்படும் ,
ஒரு சின்ன
பயணம் தானே...
இந்த கல்லூரியும் ..!

என்றும்
நினைவுகளை
மனதில் சுமந்த படி ..!

பயணிக்கிறேன் ...
உங்களுடன் சேர்ந்து..!
நானும்.......!













No comments:

Post a Comment