15 December 2011

கனா காணும் காலங்கள் ....

இன்றைய நிஜம் நாளைய நினைவு...
நிஜங்கள் பொய்யாக இருந்தாலும்..
நினைவுகள் தரும் சந்தோஷம் நிஜமே...

நாட்கள் பல இருந்தாலும் ...
 நம் பிறந்தநாளில் ..
நாம் ஏங்கும் வாழ்த்துக்களுக்கு அளவில்லை...
நானும் ஏங்கினேன் ....

கிடைத்தது சிலவாயினும் ,
அதில் நான் 
சிரித்ததற்கும், அழுததற்கும்.......
அளவே இல்லை..

எல்லோரும் எனக்கு சொன்னது..
  " பிறந்த நாள் வாழ்த்து"....
தொலைந்தது போன என் தயக்கம்...
பேசினேன் மனதில் வெறுப்புகள் இருந்தும்...
இல்லாமலும்....

இரவு பனிரெண்டு மணி.....
  அம்மா, அப்பா, அண்ணா , தங்கை..

கல்லூரியில்............
 நண்பர்கள் ......
 தோழிகள்.......

இரவு..அப்துல் அண்ணாவின் ,
மறக்க முடியாத....வாழ்த்துக்கள்..
என் பயத்தோடு கலந்து வந்த.... சிரிப்புகள்...

என் நெஞ்சில் என்றும் மறையா ....
நினைவுகள்......

12 December 2011

நானும் நிலவும்...

கிரகணம் என்று யாரோ சொல்ல கேட்டேன் ..!
உன் அழகை இன்று காணாமல் போவேனோ ...!
என் இரவு உன்னை காணாமல் போகுமோ.. !
தனியாக இன்று நாம் பேச முடியாதோ..!
என்னை காணாமல் நீ உறங்குவாயோ..!
உன்னை  காணாமல் நான்
உறங்குவேனோ..!

இத்தனை பயம் என்னில்.....
  சற்று முன் வரை.. ...
கிரகணம் முடிந்து நீ எனை ,
 காண வந்ததும் தான் தெரிந்தது...
  உன் முழு எழிலை காட்டத்தானோ..!

இதுவரை காணாத,
பேரழகியை கண்டேனே...
மொட்டை மாடியில்,
நான் கண்ட அழகியால் ..
என் உறக்கம் தொலைத்து நின்றேன் ..

நண்பா..
கொஞ்ச நேரம் நீயும்,
வெளியே வந்து பார்..!
உன் உறக்கத்தையும் தொலைத்து நிப்பாய் ..!
அவள் உன்னையும் வசிய வைப்பாள்.... !



  








7 December 2011

என் காதல்....

 கண்ணுக்குள்... கண்ணீராக,
இதயத்தில்...துடிப்பாக,
உடம்பில்... உயிராக,
வாழுமே...!
என்னவளுக்கு  
தெரியாமலே...! 

எனக்குள் உள்ள
இனிய உறவு,
எனக்கு மட்டுமே..!

"காதல் கடலை விட
ஆழம்..!"
அதை அறிந்தும் ,
அறிவில்லாமல்..
கடலுக்குள் குதித்தேன்...
இப்போது தத்தளித்து
கொண்டிருக்கிறேன்.

என்னை கரை ஏற்ற,
அவளை  அழைக்கவில்லை,
என் உயிர் பிரிந்த பின்,
அவள் கண்ணில்
தேங்கும் ஒரு துளி
கண்ணீர் எனக்கு போதுமே..!

என் காதல்....
ஜெயிக்கவும் இல்லை..!
தோற்கவும் இல்லை..!
நான் இருக்கும் வரை....
என்னுள் என் மனதோடு
வாழுமே..!





6 December 2011

அம்மா !!!

உயிரின் உள்ளே
உயிரை சுமப்பவளே!
கருவரை என்னை
அடைத்தது இருளிலே! இருந்தும் என்னை
கனவாய் கண்டாயே !
ஒன்றா!இரண்டா !
ஈரைந்து மாதமே!
உயிர்க்கு உயிராய்
நீ என்னை பெற்றாயே!
உடனே!
உன் கண்ணில்
தேங்கிய துளிகளே!
வலியால் நீ இருக்க
காரணம் இல்லாமல்
நான் அழவே!
பூவாய் என்னை தூக்கி
கண்ணத்தில் தந்த முத்தமே!
நான் பெற்ற
முதல் வரமானதே!
இதர்க்கு ஈடாய்
என்னிடம் ஏதும் இல்லயே!
என் உயிரோடு
அன்பும் தவிரவே!
                      ---நவீன்