20 October 2012

மறைப்பதும் மறப்பதும் ...

உன்னை சொந்தம்
கொள்ள நினைத்தேன் ...
கற்பனை மட்டும் ,
என் சொந்தமானது ...
காதலை சொல்லாமல்
போனது என் தவறே....
 நீ உணராமல் இருந்தால்
அது உன் தவறே...
மறப்பதும் , மறைப்பதும்
பெண்களின் சாபம்....!!!
நீ இல்லாமல் நான் இல்லை  ...
நான் இல்லாமல் நீ இல்லை ...
என்று வசனம் சொல்ல
விரும்பவில்லை......
மறைக்காமல் நான்  இருக்கிறேன்...
மறக்காமல்  நீ  இருந்தால்
போதும் எனக்கு....!!!

11 October 2012

அர்த்தமில்லாத அன்பில்.

அழ நினைத்தால் ,
கண்ணீரும் வர மறுக்கிறது ...!!!
என் மனதை வருத்த ,
அதற்கும் மனம் வர வில்லை ......!!!

என்னைச் சார்ந்தோரை விட ,
என் மேல் உள்ள
அர்த்தமில்லாத அன்பில்..!!!