காதல் காற்றே !
காதல் காற்றே !
நான் சுவாசிக்க வேணாமா?
நின்னு போன ,
எந்தன் உலகம் ,
மீண்டும் இயங்க வேணாமா?
உன்னை எண்ணி,
ஏங்கும அவஸ்தை ,
என்னுள் தீர வேணாமா?
தீராத சோகம் ,
உந்தன் வருகையால் ,
மாய்ந்து போக வேணாமா?
காதல் தீயில் ,
விழுந்த என்னை,
உன்னால் அணைக்க வேணாமா?
உந்தன் காதில் ,
எந்தன் உதடுகள்,
காதல் சொல்ல வேணாமா?
பொய்யான உலகம் ,
மெய்யான காதலை,
நம்மால் உணர்ந்திட வேணாமா?
அட!போதும்,
உந்தன் மௌனம் ,
என்னால் தாங்கிட முடியாது..!
புயலாய் அடித்தாலும்,
தென்றலாய் அணைத்தாலும்,
கவலை ஏதும் இல்லையே !!
அன்பே !!
வா... என்னில் ...!
மறு ஜென்மமும் வேணாமே!!!
No comments:
Post a Comment